SRI MALOLAN COLLEGE OF ARTS AND SCIENCE – (Affiliated to University of Madras), Mocheri Road, Madurantakam, Chengalpattu District – 603306

Faculties

வரலாற்று புகழ் மிக்க சென்னைக் கிருத்துவக் கல்லூரியில்-2008 முதல் என் பேராசிரியர் பணியைத் தொடங்கினேன்.பின் மிகப் பெரிய வாய்ப்பை மாலோலன் கல்லூரி வழங்கியது.கடந்த எட்டு ஆண்டுகளாக இங்கு தமிழ்த்துறைத் தலைவராக உள்ளேன்.15க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்,சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்நிதி விருது(2014),சிறந்த புத்தகத்திற்கான கோவை -பாரதி கலை இலக்கிய கழக விருது(2014),தமிழக அரசின் சிறந்த புத்தகத்திற்கான விருது(2014,தமிழ் வளர்ச்சித் துறை )அகிய விருதுகளைப் பெற்றுள்ளேன். -அறவியலும் இந்தியப் பண்பாடும்.மேல்நிலை 11ஆம் வகுப்புக்கான ஆசிரியர் குழுவில் இருந்துள்ளேன்(2018)கல்லூரியும் சாகித்ய அகாதமியும் இணைந்து நடத்திய இந்திய காப்பியங்கள் ஒப்பிடு என்ற கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் ,20க்கும் மேற்பட்ட இணைய வழி கருதரங்க (2020-2021)சிறப்பு விருந்தினர் என பயணம் தொடர இக்கல்லூரி துணை நிற்கிறது.

I have been working as an Assistant Professor in this reputed Institution since 2013 and giving atmost Knowledge to all my students studying here. I have presented a Paper on ” KAMBANIN PAARVAIYIL KUMBANIN PAATHIRAM” at Kaaraikudi Kamban Kazhagam. I have created WORLD RECORD “THIRUKIRAL Felicitation” at University of Pondicherry. I have also attended 10 Days workshop on “NANOOL” EZHUTHU & SOLL followed by Seminar class on the same Topic at D.G. VAISHNAVA College. I have attended one NATIONAL level Seminar.And moreover I have been conducting Typewriting Classes after 1.30 for our College Students as an extra skill activity and all our Students have appeared for the examination and got Distinction.My interesting area of my subject is ILAKANAM

பணி அனுபவம் :- 18 ஆண்டுகள், ஈடுபாடு:- கவிதை (மரபுக்கவிதை, புதுக்கவிதை, நாட்டுப்புறக் கவிதை எழுதுவது)ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல், கம்பன், பாரதி, வள்ளுவன், ஆழ்வார்கள், மணிவாசகர் ஆகியோரிடம் ஈடுபாடு, சோதிடம், பெற்ற விருதுகள்:- பாரதி பணிச்செல்வர், பாவேந்தர் விருது, ஜோதிஷ வாசஸ்பதிஅனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் செங்கற்பட்டு கிளை பொறுப்பாளர், வெளியிட்ட நூல்கள்:- பாரதிவிடுதூது (படைப்பிலக்கியம்) கண்டேன் கம்பனை (பதிப்பாசிரியர்) 25 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்காளமேகப் புலவர் பாடல்களில் இளமுனைவர் பட்ட ஆய்வு,அஷ்டப் பிரபந்தத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

பணி அனுபவம் :- 2004 – 2005 வரை சர்வ சேவா பள்ளி, உத்திரமேரூர், 2005 முதல் 2007 வரை கே எஸ் ராஜா ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேஎஸ் ராஜா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, செஞ்சி.2008 முதல் 2015 வரை ஸ்ரீ சந்தோஷி கலை அறிவியல் கல்லூரி, பையம்பாடி 2015 முதல் இன்று வரை ஸ்ரீ மலோலன் கலை அறிவியல் கல்லூரி, மதுராந்தகம்முனைவர் பட்ட ஆய்வேடு:- கம்பராமாயணத்தில் அரசியல் போரியல் நெறிகள்:-கம்பராமாயணப் பொருண்மையில் 5 கருத்தரங்க கட்டுரைகள். பிற பொருண்மைகளில் 4 கருத்தரங்க கட்டுரைகள்.பகுதிநேரப்பணி :-மாற்றுத் திறனாளி மாணவர் களுக்கு பேசும் பயிற்சி அளித்தல்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொல்காப்பியம் காட்டும் சமூகம் எனும் தலைப்பில் முனைவர் பட்டம்,உதவிப்பேராசிரியராக 8-ஆண்டுகளாக தொடர் பயணம், மார்க்சிய நோக்கில் பழந்தமிழகம்,சமூகவியல் பார்வையில் பழந்தமிழகம் என இரு நூல்கள் வெளியீடு .குறிப்பாக பதிவுகள். காம்,கீற்று. காம் இணைய இதழ்களில் 20-க்கும் மேற்பட்ட இயற்கை, சமூக அடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட கட்டுரைகள்,உலக ,தேசிய கருத்தரங்குகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டுரைகள்,கவிதைகள் எழுதுவதிலும் பேச்சரங்கமும் பட்டிமன்றமும்,நூல் வெளியீடும் ஒருங்கிணைப்பும்,10-க்கும் மேற்பட்ட பயிலரங்கம்,கருத்தரங்கப் பங்கேற்பு,தமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 2- உலக சாதனை நிகழ்வில் பங்கு,அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பாரதி பணிச்சுடர் விருது போட்டித்தேர்வு(tnpsc) மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் பணி அனுபவம் போன்றவை குறிப்பிடத்தகுந்தது.

Scroll to Top